Sunday, March 18, 2018

*ஊழியா்களின் கனிவு*

அலுவலகத்தில் பணிபுரியும் போது ஊழியா்கள் அமைதியாகவும் பெருந்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். சக ஊழியர்களிடம் கனிவாகப் பேசவேண்டும். கவனச் சிதைவில்லாமல் காலத்தை வீணடிக்காமல் பணியில் ஈடுபட வேண்டும். அலுவலகத்தில் அமைதிகாத்து, சக ஊழியர்களிடம் கலந்து பேச வேண்டிய நிர்பந்தம் வந்தால், அமைதியாக மற்றவர்களுக்கு இடையூறு நேரவண்ணம் தாழ்ந்த குரலில் பேச வேண்டும். அலுவலகத்தகவல்களை எக்காரணம் கொண்டும் மற்றவர்களிடமும் தொடர்பில்லாதவர்களிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அலுவலகத்திற்கு வரும் மனுதாரர்களிடமிருந்தோ அல்லது பொது மக்களிடமிருந்தோ எக்காரணத்தைக் கொண்டும் எவ்விதமான அன்பளிப்பும் பெறக்கூடாது. அவர்களிடம் உதவியைப்பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்றிக்கடன் அல்லது கடப்பாடு உடையவர்கள் என்ற நிலைக்கு உள்ளாகக்கூடாது. அலுவலகத்தில் குப்பைக்கூடை வைத்து அனைத்துக்குப்பைகளையும் அதில் தான் சேகரிக்க வேண்டும். எழுது பொருள்கள், கோப்புகள் அங்கிமிங்குமாக சிதரிக்கிடக்காமல் ஒழுங்காக நிலைப்பேழையில் அடுக்கி வைக்கப்பட வேண்டும்

No comments:

Post a Comment

*About Commutation* / தொகுத்து பெறும் ஊதியம் பற்றி

*Commutation*  பற்றி: அஞ்சல் துறை ஊழியர் ஒருவர் ரிட்டையர் ஆகும்போது, அவருக்கு வழக்கமான பணப் பலன்களுடன்,  "கம்யூடேஷன்" என்ற பெயரில்...