Showing posts with label Pension. Show all posts
Showing posts with label Pension. Show all posts

Friday, October 28, 2022

*பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை!!*

*பழைய ஓய்வூதியத் திட்டமே தேவை!!*


           பழைய ஓய்வூதியத் திட்டம்தான் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கு நிறைவான ஓய்வூதியத்தை வழங்கி வந்தது. அத்திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய புதிய ஓய்வூதியத் திட்டம், ஊழியா்களிடம் ஓய்வூதியத்துக்காக பங்களிப்பைக் கோருகிறது. தவிர ஓய்வூதியமும் சொற்பமாக உள்ளது.

இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டம், 2003 டிசம்பரில் அறிவிக்கப்பட்டு, 2004 ஏப்ரல் 1 அன்று தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால், அரசு ஊழியா் ஓய்வூதியத்திற்கு ரூ. 65,000 கோடி செலவிடப்படுவதாகவும், இத்தொகை ஆண்டுதோறும் 20 % உயரும் என்றும் 2003-இல் கூறப்பட்டது. இதனைக் குறைப்பதன் மூலம் வளா்ச்சித் திட்டங்களுக்கு அத்தொகையைப் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டது.

முதலில் மத்திய அரசு இத்திட்டத்தை தனது புதிய ஊழியா்களிடம் அறிமுகப்படுத்தியது. பிறகு மாநில அரசுகளும் தொடா்ந்தன. மேற்கு வங்க மாநிலம் மட்டும் இதை ஏற்காமல் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடா்ந்தது.

 

இத்திட்டத்துக்கு அரசு ஊழியா்களிடையே இயல்பாகவே எதிா்ப்பு இருந்தது. ஆனால் இப்போது அரசு ஊழியா்கள் போராடும்போது காணப்படும் வேகம் ஆரம்பக்காலத்தில் அவா்களிடம் காணப்படவில்லை. ஏனெனில் புதிய மாற்றம் அறிவிக்கப்படும்போது அதன் விளைவுகள் முழுமையாகத் தெரிவதில்லை.

புதிய ஓய்வூதியத் திட்டம் உடனடியாக ஊழியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. குறிப்பாக 2004 ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தவா்கள் ஓய்வு பெறும்போதுதான் இதன் பாதிப்பு முழுமையாகப் புலப்படும்.

 

தற்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியா்கள் போராடி வருகின்றனா். ஏற்கெனவே, ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிவிட்டன. தில்லி, பஞ்சாப் மாநிலங்களும் இதே முடிவை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன. ஆந்திர பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களிலும் அரசு ஊழியா்கள் போராடி வருகின்றனா்.

 

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்டி, ஒவ்வொரு அரசு ஊழியரிடமிருந்தும் மாதந்தோறும் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 % பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளா் ஓய்வூதிய நிதிக்கு அனுப்பப்படுகிறது. அப்போது அரசும் தனது பங்களிப்பாக 14 % (முன்னா் இது 10 %) அளிக்கிறது. இத்தொகை நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு வட்டி ஈட்டப்படுகிறது. அரசு ஊழியா் ஓய்வு பெறும்போது, இந்தத் தொகையை வட்டியுடன் பெறலாம். அல்லது, அவா்கள் வருடாந்திரத் தொகையை நிா்ணயித்துக்கொண்டு குறிப்பிட்ட பெருந்தொகையை வருடந்தோறும் பெறலாம்.

 

அதாவது புதிய ஓய்வூதியதாரா்கள் ஓய்வூதியத்துக்காக தாங்களே ஊதியத்திலிருந்து பங்களிப்புத் தொகையை அளிக்கிறாா்கள். அத்தொகை முதலீடாகும் நிறுவனங்களின் வளா்ச்சியே அத்தொகையின் மதிப்பை நிா்ணயிக்கிறது. ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியா்கள் எந்தப் பங்களிப்பும் அளிக்கத் தேவையில்லை. அதேசமயம், அவா்கள் பணி ஓய்வு பெற்ற மாதத்தில் வாங்கிய ஊதியத்தில் சரிபாதித் தொகையை ஓய்வூதியமாக அரசு வழங்குகிறது. இது அனைவராலும் ஏற்கப்பட்ட திட்டம்.

 

சா்வதேச தொழிலாளா் அமைப்பால் (ஐஎல்ஓ) 1953-இல் நடத்தப்பட்ட 102-ஆவது சமூகப் பாதுகாப்பு மாநாடு, ஓய்வு பெறும் ஊழியா்களது கடைசி மாத காப்புறுதி (இன்ஷ்யூா்டு) ஊதியத்தில் 50 % -ஐ ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதனை அரசு - தொழில் நிறுவனங்கள் - தொழிலாளா்கள் என முத்தரப்பும் இணைந்து நடைமுறைப்படுத்துவதன் மூலமாக சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என்றும் ஐஎல்ஓ கூறியது.

ஐஎல்ஓ-வின் பரிந்துரை, அரசு ஊழியா்களுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தொழிலாளா்களுக்கும் பொருந்தக் கூடியது. ஆயினும் இந்தியாவில் மொத்த வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க இடத்தை அரசு ஊழியா்களே வகிக்கின்றனா்.

 

இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்புத் துறையில் முறைசாா் தொழிலாளா்களின் விகிதம் 7 % -க்கும் குறைவு. அதிலும் பொதுத்துறை (அரசு சாா்பு) ஊழியா்கள் 4 % தான் உள்ளனா். 2017 -ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 34.65 லட்சம் மத்திய அரசு ஊழியா்களும், 1.06 கோடி மாநில அரசுகளின் ஊழியா்களும் உள்ளனா். இவா்களில் 2004-க்குப் பிறகு பணியில் சோ்ந்தோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அவா்களை மட்டுமே புதிய ஓய்வூதியத் திட்டம் பாதிக்கும்.

 

ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் புதிய ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அரசு தனது சமூகப் பொறுப்புணா்வைத் தட்டிக் கழிக்க முடியாது. ‘சமமான பணிக்கு சமமான ஊதியம்’ என்ற நிலையை தொழிலாளா்களிடம் நிலைநாட்ட வேண்டிய பொறுப்புள்ள அரசுக்கு, தொழிலாளா்கள் கௌரவமான ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறுவதை உறுதிப்படுத்தும் கடமையும் இருக்கிறது.

 

ஒட்டுமொத்தமாகப் பாா்க்கும்போது மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கவனம் குறைந்துவருவது தெரிகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. நாட்டின் மக்கள்தொகையில் இவா்களின் பங்கு 1951-இல் 5.5 % ஆக இருந்தது, 2011-இல் 8.6 % ஆக உயா்ந்திருக்கிறது.

 

நமது நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 2021-இல் 13.8 கோடி (2011-இல் இது 10.4 கோடி). இது உலக அளவிலான மூத்த குடிமக்களின் எண்ணிக்கையில் 12.5 % ஆகும். இது 2026-இல் 17.3 கோடியாக அதிகரிக்கும் என்று ஐ.நா. மக்கள்தொகை நிதி அமைப்பு (யுஎன்பிஎஃப்) மதிப்பிட்டுள்ளது.

 

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (என்எஸ்ஓ) கணிப்புப்படி, 2031-இல் முதியோா்களின் எண்ணிக்கை 19.4 கோடியாக உயரும். அதுமட்டுமல்ல, முதுமை காரணமாக பிறரைச் சாா்ந்திருப்போா் 1961-இல் 10.9 % போ். அது 2011-இல் 14.2 % ஆக உயா்ந்திருக்கிறது. 2031-இல் இது 201 % ஆக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

 

இந்த நிலை, முதியோருக்கு அரசு கவனம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆனால் அரசோ, முதியோா் பாதிக்கப்படும் வகையில் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைத்திருக்கிறது. முறைசாா்ந்த தொழிலாளா்களுக்கே ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காதபோது பிற தொழிலாளா்கள் எவ்வாறு அதனைப் பெற முடியும்?

 

தற்போது வழங்கப்பட்டுவரும் ஓய்வூதியத் திட்டங்களிலேயே முரண்பாடும் ஒழுங்கின்மையும் காணப்படுகின்றன. உதாரணமாக, ஐந்தாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் சட்டப்பேரவை உறுப்பினா் (எம்எல்ஏ) ஒருவா் முழு ஓய்வூதியம் பெறுகிறாா். இதிலும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு உண்டு. மத்திய பிரதேசத்தில் ஒருநாள் பணியாற்றிய எம்எல்ஏவும், ஹரியாணாவில் 7 முறை தோ்வான எம்எல்ஏவும் ரூ. 2.38 லட்சம் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகிறாா்கள்.

தெலங்கானாவில் ஒருமுறை எம்எல்ஏவாக இருந்தவருக்கு ரூ. 50 ஆயிரமும், மூன்று முறைக்கு மேல் எம்எல்ஏவாக இருந்தவருக்கு ரூ. 75 ஆயிரமும் ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றன. எம்எல்ஏ ஓய்வூதியம் ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 30 ஆயிரமாகவும், தமிழகத்தில் ரூ. 40 ஆயிரமாகவும் உள்ளது.

 

இதனை தொழிலாளா் ஈட்டுறுதி நிதி நிறுவனம் (இபிஎஃப்) வழங்கும் தனியாா் நிறுவனத் தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்துடன் ஒப்பிட்டுப் பாா்க்கலாம். லட்சக்கணக்கில் மாத ஊதியம் பெற்ற உயரதிகாரிகள் கூட இத்திட்டத்தில் ரூ. 1,500 மட்டுமே ஓய்வூதியமாகப் பெறுகிறாா்கள்; அண்மையில் ஓய்வு பெற்றவா்கள் கூடுதலாக ஆயிரம் ரூபாய் பெறக் கூடும். இதற்குக் காரணம், அவா்களது ஓய்வூதியப் பங்களிப்புத் தொகையானது ஒட்டுமொத்த ஊதியத்தின்படி கணக்கிடப்படாமல், காப்புறுதி ஊதியத்தின்படி கணக்கிடப்படுவதே.

 

இபிஎஃப் ஓய்வூதியத் திட்டம் அமலான 1995-இல் காப்புறுதி ஊதியம் ரூ. 6,500 ஆக இருந்தது. அண்மையில்தான் இது ரூ. 15,000 ஆக உயா்த்தப்பட்டிருக்கிறது. தற்போதைய ஓய்வூதியக் கணக்கீட்டு சூத்திரத்தின்படி, 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றாலும் அதிகபட்சம் ரூ. 3,250 மட்டுமே ஓய்வூதியமாகப் பெற முடியும்.

 

ஒரு காலத்தில், இத்தொகை ரூ. 500 ஆகக்கூட இருந்ததுண்டு. அதுவரை தொழிலாளா்கள் பெற்றுவந்த ஊதியத்தில் 27 % கூடப் பெற இயலாத நிலையில் 83 % தொழிலாளா்கள் இருப்பதை அறிந்த மத்திய அரசு இத்தொகையை ரூ. 1,000 ஆக்கியது.

ஆதரவற்ற முதியோருக்கான ஓய்வூதியம் கூட இபிஎஃப் ஓய்வூதியத்தைவிட அச்சமயத்தில் அதிகமாக இருந்தது. ஆம், தெலங்கானா மாநில அரசு ஆதரவற்ற முதியோருக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்கிவந்தது. தற்போது ரூ. 2,500 ஆக உயா்த்தப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ரூ. 2,750ஆக இது அதிகரிக்கப்பட உள்ளது. தில்லி, ஹரியாணா மாநிலங்களிலும் முதியோா் ஓய்வூதியமாக ரூ. 2,500 வழங்கப்படுகிறது.

 

மேற்கண்ட விவரங்கள் அனைத்தும், அரசு, தனியாா் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு, அவா்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக அளிப்பதே சரியானாதாக இருக்கும் என்பதையே காட்டுகின்றன. ஆனால் அரசோ, அரசு ஊழியா்களின் ஓய்வூதியத்திலேயே கை வைத்திருக்கிறது.

 

அரசு இதற்கு முன் ஊழியா்களுக்கு அளித்துவந்த ஓய்வூதியப் பயன்களை அதிகரிக்காவிட்டாலும், அவற்றைக் குறைக்காமலேனும் இருக்கலாம். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவராமல் அரசு தாமதிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

கட்டுரையாளா்:

பொருளாதார நிபுணர்.
நன்றி தினமணி.

Tuesday, April 26, 2022

இராஜஸ்தான் மாநில அரசு தனது ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
 🚫 *CPS ஒழிப்பு இயக்கம்* 🚫
             *மாநில மையம்*
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

```RAJASTHAN state's implementation of OLD PENSION SCHEME : A HISTORIC HUMANE DECISION```

வணக்கம்.

இராஜஸ்தான் மாநில அரசு தனது ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது தொடர்பாக அம்மாநில 'தகவல் & பொதுமக்கள் தொடர்புத் துறை' நாடு முழுவதிலும் வெளியாகும் ஆங்கில தினசரி நாளிதழ்களில் *'ஒரு வரலாற்றுப்பூர்வ மனிதநேய முடிவு'* எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள விளம்பர அறிக்கை ஆங்கில தினசரி நாளிதழ்களின் முதல் பக்கத்தை முழுமையாக அலங்கரித்துள்ளது.

இது வெற்று விளம்பரமாக இல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டி நாடுமுழுவதும் போராடி வரும் ஊழியர்களுக்கும் அவர்கள் பணியாற்றும் அரசு நிருவாகத்திற்கும் இடையேயான 'கோரிக்கையை வலுப்படுத்தும் பாலமாகவே' அமைந்துள்ளது எனலாம். ஏனெனில், அவ்விளம்பரம் ஒரு அரசின் சாதனை விளம்பரமாக இல்லாமல், ஊழியர்களின் & பொதுமக்களின் நிலையில் நின்று அவர்களுக்கான உரிமையின் நியாயத்தைப் பேசுவதாக, *இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ள ஒரு சேமநல அரசிற்கான பார்வையில்* அவ்விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, *தமிழ்நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், ஆட்சியாளர்களும், அரசியல் கட்சியினரும் குறிப்பாகப் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில், CPS ஒழிப்பு இயக்கம் பொறுப்புணர்வுடன் அவ்விளம்பரத்தைத் தமிழ்ப்படுத்தி இங்கே வெளியிடுகிறது.*

👇👇👇👇👇👇👇👇

👉 இராஜஸ்தான் அரசு தனது *2022-23 நிதிநிலை அறிக்கையில் 1.1.2004-ற்குப் பிறகு பணியேற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக* அறிவித்தது.

👉 இதன் மூலம் *அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை (Gratuity), ஓய்வூதியத் திரண்ட தொகை (Commutation) உள்ளிட்ட பலன்கள் கிடைப்பதால் அவர்களின் சமூகப் பொருளாதாரம் வலுவடையும்.*

👉 தற்போது பிடித்தம் செய்யப்பட்டு வரும் 10% பிடித்தம் உடனடியாக நிறுத்தப்படுவதால் 1.4.2022 முதல் அவர்களின் ஊதியம் உயரும்.

👉 கூடுதலாக இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கும் GPF வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு அவர்களின் பணி ஓய்வின் போது வழங்கப்படும்.

--- ----- ---- ----

*NPS-ஐ நடைமுறைப்படுத்தியதால் நேர்ந்தது என்ன?*

★ ஓய்வூதியத்திற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லாமல் போனது.

★ ஊழியர்கள் 10% பங்களிப்பு செய்ய வேண்டியது கட்டாயமானது.

★ ஊழியர்களை மனித உரிமை மீறலில் இருந்து பாதுகாக்க வேண்டி, இந்திய ஒன்றிய அரசிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் NPS-ஐ மறு ஆய்வு செய்யும் குழுவை அமைக்கும்படி கேட்டுக் கொண்டது.

★ இரண்டாவது நீதித்துறை ஊதிய ஆணையம் நீதித்துறையினருக்கு NPS திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என பரிந்துரைத்தது.

★ கேரளா, ஆந்திரா, இமாச்சல் & பஞ்சாப் மாநில அரசுகள் NPS-ஐ மறு ஆய்வு செய்ய குழுக்களை அமைத்துள்ளன.

★ படைவீரர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதிலிருந்து அவர்களுக்குப் போதுமான சமூகப் பாதுகாப்பை பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே வழங்கும் என்பது தெள்ளத்தெளிவாகிறது.

--- ----- ---- ----

*NPS-ஐ திட்டமிடுதல், நடைமுறைப்படுத்தல் & பார்வையிடலில் மத்திய தணிக்கை ஆணையம் (CAG) வெளியிட்ட அதிர்ச்சிகரமான உண்மைகள் :*

★ NPS நடைமுறைப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதற்கான பணிசார் விதிகள் / NPS-ல் பணியேற்ற ஊழியர்களுக்கான ஓய்வுக்காலப் பலன்கள் குறித்து தற்போது வரை இறுதி முடிவுகள் ஏதும் எடுக்கப்படாது கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

★ இத்திட்டம் செயல்பட்டுவரும் விதம்  குறித்த வழக்கமான மதிப்பீடுகளை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை  மேற்கொள்ளுதல் சார்ந்தோ அல்லது வேறு ஏதாகிலும் தொழில்நுட்பத்தைச் சேர்த்து இத்திட்ட நடைமுறை சார்ந்த நம்பகத்தன்மையை அறியவோ எவ்விதக் குறியீட்டுமுறைமையும் இதில் இல்லை.

★ இத்திட்டத்தில் தகுதியானோருக்கான 100%  வரையறைகளை உறுதி செய்வதில் இன்னமும் தேக்கமே உள்ளது.

--- ----- ---- ----

*பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் :*

★ ஊழியருக்கான ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி மாத ஊதியத்தின் 50%-ஐ ஓய்வூதியமாக ஒவ்வொரு மாதமும் பெறுவர்.

★ பணவீக்கத்தில் இருந்து ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான பஞ்ச நிவாரணமாக இது இருக்கும்.

★ ஊழியர் எந்தவித பங்களிப்பும் அளிக்கத் தேவையில்லை.

★ 33% வரையிலான ஓய்வூதியத் திரண்ட தொகை (Commutation) கிடைக்கக்கூடும்.

--- ----- ---- ----

*பழைய ஓய்வூதியத் திட்டத்தால் மாநில அரசிற்கு ஏற்படும் நேர்மறைப் பலன்கள் :*

★ நல்லாட்சி நடக்க உதவியாக ஊழியர்கள் தமது பணியில் அதிக ஊக்கத்தோடு செயல்படுவர்.

★ அறிவார்ந்த மற்றும் திறமைவாய்ந்த இளைஞர்கள் அதிக அளவில் அரசின் புதிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பர்.

★ பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மாநில & மாநில மக்கள் நலனுக்கான வளர்ச்சித்திட்ட நிதியிலிருந்து ஒரு ரூபாயைக்கூட குறைக்க வேண்டிய தேவையிருக்காது.

*- தகவல் & பொதுமக்கள் தொடர்புத் துறை, இராஜஸ்தான் அரசு*

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி,  மேற்கண்டவாறு அதற்கான காரணத்தையும் ஒரு மாநில அரசே வெளியிட்டுள்ளது உள்ளபடியே மகிழ்வையும் நம்பிக்கையையும் அதிகரிப்பதாகவே உள்ளது.

தமிழ்நாடு CPS ஒழிப்பு இயக்கம் சார்பாக, இராஜஸ்தான் மாநில ஊழியர்களுக்கும் மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடே இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு.அசோக் ஹெலாட் அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கோள்கிறோம்.

_தோழமையுடன்,_

*மாநில ஒருங்கிணைப்பாள்கள்*
_மு.செல்வகுமார்_
_சு.ஜெயராஜராஜேஸ்வரன்_
_பி.பிரெடெரிக் எங்கெல்ஸ்_

*மாநில நிதிக் காப்பாளர்*
_சி.ஜான் லியோ சகாயராஜ்_

*CPS ஒழிப்பு இயக்கம்* 
*மாநில மையம்*

Saturday, June 5, 2021

*No pension for govt employees who resign: SC*

*அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் முன்பாக ராஜினாமா செய்தால் பென்ஷன் இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி No pension for govt employees who resign: SC*

ராஜினாமா செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓய்வூதிய சட்டம் அரசுப் பணியில் உள்ள ஊழியர்களுக்கும் பாதுகாப்புத்துறை ஊழியர்கள், சிவில் அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
20 ஆண்டுகள் பணியில் இருந்த பின்னர் ராஜினாமா செய்த அரசு ஊழியர் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து யமுனா பவர் லிமிட்டட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் சந்திரசூட், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விருப்ப ஓய்வும் ராஜினாமாவும் வெவ்வேறு என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
ராஜினாமா செய்துவிட்டு செல்லும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெறும் தகுதி இல்லை என்றும் அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003 டிசம்பருக்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இச்சட்டம் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
Source:  polimernews

The pension rules apply to government servants, including civilian government servants in the defence services, appointed before December 31, 2003.
• The court passed the order on an appeal filed by BSES Yamuna Power Ltd challenging an order of the Delhi high court directing it to provide pension to an employee who resigned after 20 years of service.
NEW DELHI: Making a distinction between voluntary retirement and resignation, the Supreme Court has said that government employees will not be entitled to pension if they resign from service as it forfeits their past service.
Referring to the Central Civil Services Pension Rules, a bench of Justices D Y Chandrachud and Hrishikesh Roy said that in case of resignation, the entire past service would be forfeited, and consequently, an employee would not qualify for pensionary benefits.
The pension rules apply to government servants, including civilian government servants in the defence services, appointed before December 31, 2003.
The court passed the order on an appeal filed by BSES Yamuna Power Ltd challenging an order of the Delhi high court directing it to provide pension to an employee who resigned after 20 years of service. The HC had said that the employee was entitled to get voluntary retirement after completing 20 years of service and he was, therefore, entitled to pensionary benefits after resigning from the job.
The apex court, however, said taking voluntary retirement and resigning from job are two different things and pension cannot be given in case of resignation. “Where an employee has resigned from service, there arises no question of whether he has in fact voluntarily retired or resigned. The decision to resign is materially distinct from a decision to seek voluntary retirement. The decision to resign results in the legal consequences that flow from a resignation under the applicable provisions. These consequences are distinct from the consequences flowing from voluntary retirement and the two may not be substituted for each other based on the length of an employee’s tenure,” the bench said.
The apex court said though both involve voluntary acts, they operate differently. “One of the basic distinctions is that in case of resignation it can be tendered at any time, but in the case of voluntary retirement, it can only be sought for after rendering the prescribed period of qualifying service. Another fundamental distinction is that in case of the former, normally retiral benefits are denied but in case of the latter, in the same is not denied,” the court said while referring to its earlier verdicts.
Source: timesofindia 
-----------------------

Wednesday, October 10, 2018

*ஓய்வூதியம் மாற்றம்?*

நண்பர்களே,
அருகில் குடும்ப ஓய்வூதியம் பெறும் தாய்மார்கள் இருந்தால் கீழ்கண்டத் தகவலைக் கூறி உதவுங்கள். நன்றி!

தமிழக அரசு 1-10-1979 முதல் 1-7-1996 வரையுள்ள காலத்தில் ஓய்வுப்பெற்றவர் கள் ,  30 ஆண்டுகள் பணிபுரிந்திருந் தாலே முழு ஓய்வூதியம் பெறலாம் என்ப தற்கு  அரசாணை எண் 245/நிதி/நாள் 19-7 - 2018 ல் வெளியிட்டுள்ளது. முன்பு 33 ஆண்டுகளாக இருந்தது.

அனைவருக்கும் நிலுவைத் தொகை கிடைக்கும். பலர் இறந்திருந்தாலும் மனைவிக்கு உண்டு. எடுத்துக்காட்டாக ரூ.1000 ஊதியம் பெற்று 30 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு முன்பு கிடைத்த ஓய்வூதியம் ரூ.1000/2×30/33=ரூ.455. தற்போது புதிய  ஆணைப்படி ரூ 1000/2×30/30= ரூ 500.

எனவே ரூ 1000 ஊதியம் பெற்றவருக்கு ரூ.45 கூடுதலாக கிடைக்கும். ஆண்டுக்கு 12×45= 540  உயரும். ஆணைப்படி 24 ஆண்டுகள் முதல் 42 ஆண்டுகளுக்கு நிலுவைத்தொகைக் கிடைக்கும். சிலருக்கு லட்சக் கணக்கிலும் வரலாம்

எனவே குடும்ப ஓய்வுதியம் பெறும் தாய்மார்கள், தாங்கள் உறுப்பினராக உள்ள ஓய்வூதியர் சங்கத்தை அணுகி  விண்ணப்பம் பூர்த்தி செய்து, கணவர் கடைசியாகப் பணியாற்றி ஓய்வுப் பெற்ற ஆபிஸில் கொடுங்கள்.

ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் என அனைவருக்கும் அரசாணைப்படி நிலுவைத்தொகை  கிடைக்கும்.ரூ. 100  அல்லது 200 கொடுத்து சங்கத்தில் சேர கணக்குப் பார்த்தவர்கள் உடன் ஏதாவது ஒரு  சங்கத்தில்  சேர்ந்து பணப்பயனைப் பெற முயற்சியுங்கள்.

தங்கம் செய்யாததை சங்கங்கள் செய்யும் என்பதை மனதில்  கொள்ளுங்கள்!  வாழ்த்துகள்!

*About Commutation* / தொகுத்து பெறும் ஊதியம் பற்றி

*Commutation*  பற்றி: அஞ்சல் துறை ஊழியர் ஒருவர் ரிட்டையர் ஆகும்போது, அவருக்கு வழக்கமான பணப் பலன்களுடன்,  "கம்யூடேஷன்" என்ற பெயரில்...