Showing posts with label Staff. Show all posts
Showing posts with label Staff. Show all posts

Saturday, July 20, 2024

For Whom Get Compassionate Ground Posts / *கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?*

*கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?*     

இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

2     கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?    

 ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

3     கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?  

   தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

4     இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?     

உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

5     இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?  

   இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

6     கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்? 

     இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

7     கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?    

    கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.
    கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.
    இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.
    இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.
    இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.
    நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.
    கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.
    வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.
    இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.

8     கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற  நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?     

 காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.

9     கருணை அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?   

  காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து  கணக்கிடப்படுகிறது.

10     காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?     

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும்,  ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.

11     என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3,  என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார்,  நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன்,   என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?   

  அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,  எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்,  ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.

12     என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன்,  5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை,  எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன்,  நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?    

 தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்,  ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.

13     கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா?    

 கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03.08.1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும்,  மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

14     கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,  ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,     தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.

15     திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?  

   திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

16     மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?   

   கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).
    அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.
    மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.

இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்  யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

*விவிலியராஜா*🙏🏻👍 *வழக்கறிஞர்*
*9442243433*

Saturday, September 23, 2023

அரசு ஊழியர்/ஓய்வூதியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் / State State Government Salary Package(SGSP)

🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺🔻🔺

*எத்தனை பேருக்கு தெரியும்??* 

அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் ,குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு.

👉🏼👉🏼 நாம் அனைவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  (SBI) வங்கியில் சம்பள /பென்சன் கணக்கை சேவிங்க்ஸ் பேங்க் (Savings Account)என்ற முறையிலேயே தொடர்ந்து வருகிறோம். 

ஆனால் அரசு ஊழியர்/ஓய்வூதியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு நமது கணக்கை மாற்ற வேண்டும். அதாவது State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும்.

சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு/பென்சனர்க்கு மட்டுமே உடையது. 

இம்முறையை எந்த வங்கி மேலாளரும் நம்மிடம் கூறுவது இல்லை. 

ஏனெனில் இம்முறையில் பல்வேறு சலுகைகள் அரசு அலுவலர்களுக்கு உண்டு. 

முதலாவதாக எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வித பண இழப்பும் இன்றி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக் கொள்ளலாம்.  எந்தவித சர்வீஸ் சார்ஜும் இதற்கு எடுக்கப் படுவதில்லை. 

ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இல் மட்டுமல்ல எந்த ஏடிஎம்மில் வேண்டுமானாலும் நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். 
அதற்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கப்படுவது இல்லை. 

அடுத்து ஜீரோ பேலன்ஸ் முறை தொடர்ந்து கொள்ளலாம். 

அடுத்ததாக தனிநபர் கடன், வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன் ஆகிய லோன் களுக்கு இம்முறை அக்கவுண்ட் உள்ளவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் 50 சதவீதம் மட்டுமே பிராசஸிங் ஃபீஸ் கொடுக்க வேண்டும்.

SB அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு பெர்சனல் லோன் சர்வீஸ் சார்ஜ் பத்தாயிரம் என்றால், SGSP அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 5000 மட்டுமே. 

அடுத்ததாக பிரீ இன்சுரன்ஸ் 20 லட்சம் வரை இந்த அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு உண்டு. 

இன்னும் பல்வேறு சலுகைகள் இந்த அக்கவுண்டிற்கு உண்டு. 

எனவே அனைத்து ஆசிரியர்களும், அனைத்து அரசு ஊழியர்களும்/ஓய்வூதியர்களும் உங்கள் வங்கிக்கு சென்று உடனடியாக உங்கள் கணக்கை SGSP மாற்றி விடுங்கள். 

இம்முறையில் மாற்றுவதற்கு நாம் வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டியவை:

1. கவரிங் லெட்டர் 
2. பேங்க் புக் ஜெராக்ஸ் 
3. ஆதார் அட்டை நகல் 
4. பான் கார்டு நகல் 
5. ஆன்லைன் பே ஸ்லிப் 

இவற்றை கொண்டு உங்களது அக்கவுண்டை மாற்றிக் கொள்ளுங்கள். 

*இந்த விடுமுறையில் கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் அவசியமான இந்த செயலை செய்து விடுங்கள். தாமதிக்க வேண்டாம்.* நன்றி.வணக்கம்.

From,
--------------------------------------
------------------------------------
---------------------------------
To,
The Manager,
State Bank of india
-------------------- Branch,
------------------------------------.
Sir,
       Sub: Request to treat my SB account No.___. as a pension account to avail the concessions granted to the pensioners-Regarding.

                       I am a tamil nadu Govt servant pensioner and drawing my pension from the above SB account as per the PPO No.C430080/FOR from  onwards from your branch. The above SB account was opened by me purely for drawing my pension from T.N.Govt servant and I request to convert my above SB account as pension SB account instead of common public SB account so as to avail the following concessions permitted to the pensioners by the bank.

a. To maintain zero balance 
b. To draw cash from ATM more than five times in a month
c. To avail the maintenance charge free for my ATM transactions.
d. To avail other concessions granted to the pensioners by the bank.

      Signature of the pensioner        

  Date:

Thursday, June 24, 2021

*Govt Staff Legal heirs Post - அரசு பணியாளர் வாரிசுகளுக்குகருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?*

🛡️🔥🛡️🔥🛡️🔥🛡️ *அரசு பணியாளர் வாரிசுகளுக்குகருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது?*  

 

இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள்.  விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

2)   கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?    

 ஆம்,  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

3)    கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?  


   தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

4)    இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார்,  அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா?     

உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது,  இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.

5)  இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?  

   இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.

6)  கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்? 

     இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

7)  கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?    

    கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.
    
1) கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.

 2) இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.

 3) இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.

4) இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.

5) நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.

 6) கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.

 7)வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.

8) இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.

8)  கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற  நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?     

 காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.


9)    கருணை அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?   

  காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து  கணக்கிடப்படுகிறது.

10) காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?     

காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும்,  ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.

11)  என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3,  என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார்,  நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன்,   என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா?   

 அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,  எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம்,  ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர கோறும வயது 18 ஆகும்.

12)   என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு  தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன்,  5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை,  எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன்,  நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?    

 தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்,  ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.


13)  கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா?    

 கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03.08.1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும்,  மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

14)   கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது,  ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,     தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.


15) திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?  

திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

16)  மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?   

கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.

 1) மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).

 2) அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.
    
3) மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.

*மேற்கண்ட நடைமுறைகள் போக்குவரத்து கழகத்திற்கும் பொருந்தும்.* 

நன்றி...

Monday, May 3, 2021

Seniority (முதுநிலை)

*அனைத்துத் துறைகளிலும் முதுநிலை பட்டியல் என்பது மதிப்பெண் அடிப்படையில் 16.06.2021 க்கு முன்னர் ஏற்படுத்த வேண்டும். மாண்புமிகு சென்னை  உயர் நீதிமன்ற தலைமை   நீதிபதி அவர்கள் அமர்வு உத்தரவு*.  நாள். *08.04.2021* .



( P.S.Balamurugan,Salem 
    ( 30.04.2021 IST 11.16 pm )

மேற்படி தீர்ப்புரையின் சாரம்சம் பின்வருமாறு-

 முதுநிலையினை ரோஸ்டர் படி வைக்கப்பட வேண்டும் என்று கூறிய சட்டப்பிரிவு  40 (1) ( TNGS (cos) Act- 2016, இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்று, கடந்த 15 .11.2019 அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்புரைக்கப்பட்டுள்ளதை  தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்றும்,

மேலும், அப்படி மதிப்பெண் அடிப்படையில் ( Mark Seniority) முதுநிலை பட்டியல் அனைத்து துறைகளிலும் அனைத்து மட்டங்களிலும் ( Various Levels and across Departments ) தயாரிக்கப்பட கால அவகாசம் வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் முன் கோரியது, என்றும்

 மேலும்,மாண்பமை உயர்நீதிமன்றம் ( Judgment Dated.15.11.2019 ) மற்றும் மாண்பமை இந்திய உச்சநீதிமன்றம் ( 22.01.2016 and 06.07.2020, 
25.08.2020, and 15.10.2020 ) தீர்ப்புரைகளின் படி,
தமிழக அரசு முதல்நிலை ( Initial Level ) முதுநிலைப் பட்டியலை, மதிப்பெண் அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொண்டு, *முதல் நிலை மட்டத்தில் மதிப்பெண் அடிப்படையில்* முதுநிலைப் பட்டியல் தயாரிக்கப்படும் வேலை முடிந்துவிட்டது என்றும், மேலும், 


 தமிழக அரசு, நீதிமன்ற  அவமதிப்பு வழக்கிற்காக, மாண்பமை இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்பு,  கடைசியாக மார்ச் 16, 2021 அன்று ஆஜராகி, அனைத்து மட்டங்களிலும் முதுநிலை பட்டியலை, மதிப்பெண் அடிப்படையில் மறு வரைவு செய்யப்பட அவகாசம் கோரியது    என்றும், மேற்படி அவமதிப்பு வழக்கு விரைவில் List க்கு வரும் என்று இத்த நீதிமன்றம் எண்ணுகிறது என்றும்,


மேற்படி, *முதுநிலைப் பட்டியலை மதிப்பெண் அல்லாது ரோஸ்டர் படி ஏற்படுத்தப்பட்டு,* அதன் படி, பதவி உயர்வினை அனுபவித்து வரும் அனைத்து பணியாளர்களையும் அவர்களின் *முந்தய பணி நிலைக்கு பணி இறக்கம் செய்யப்பட வேண்டும் என்றும்* , அவர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு என்பது *தற்காலிக பதவி உயர்வு என்பதால், அவர்கள் ஆக்கிரமித்த பதவி உயர்வினை உரிமை கோர இயலாது* என்றும், 

 *அனைத்துத் துறைகளிலும் முதுநிலை பட்டியல் என்பது மதிப்பெண் அடிப்படையில் 16.06.2021 க்கு முன்னர் ஏற்படுத்த வேண்டும் என்றும்* ,


 மாண்புமிகு  உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் அமர்வு தீர்ப்புரை ( 08.04.2021 ) வழங்கியுள்ளது...

=======================
 *The Original  Order* 
-------------------------------------

THE  HON'BLE  CHIEF  JUSTICE 
and 
SENTHILKUMAR  
RAMAMOORTHY,  J. 

                   *ORDER* 

 ( *Order  of  the  Court  was  made  by  the  Hon'ble  Chief  Justice)* 

 Though  no  formal  order  is  being  made  on  the  petitions  filed  for addition  of  parties,  the  proposed  added  parties  will  be  heard  before  the matter  is  disposed  of. 

2.  The  State  says  that  the  subsisting  interim  order  prohibits  any further  promotion  to  be  given  by  resorting  to  Section  47(1)  of  the Tamil  Nadu  Government  Servants  (Conditions  of  Service)  Act,  2016.  It is  further  submitted  on  behalf  of  the  State  that  upon  Section  40  of  the Act  being  declared  ultra  vires  by  Division  Bench  of  this  Court  by  an order  of  November  15,  2019,  a  colossal  exercise  has  been  undertaken by  the  State  to  re-work  the  position  of  seniority  among  its  employees at  various  levels  and  across  departments.  The  State  says  that  such exercise  will  require  time  and  the  seniority  list  at  the  first  level  has been  completed.  The  State  also  informs  the  Court  that  contempt proceedings  have  been  initiated  before  the  Supreme  Court  for  non compliance  with  the  Supreme  Court  orders  that  required  the  merit system  to  be  followed  rather  than  the  roster  system  in  determining  the seniority.  The  State  says  that  only  in  cases  of  dire  necessity,  the emergency  provision  under  Section  47(1)  of  the  said  Act  had  been resorted  to;  but  even  that  can  no  longer  be  done  in  view  of  the  order of   status  quo  passed  in  the  present  proceedings.  Prima  facie,  it appears  that  the  State  has  to  accept  the  merit-based  seniority  at  the initial   level,   since   any   other   basis  is  precluded  by  the  previous judgments  of  this  Court  as  affirmed  or,  at  any  rate,  not  interfered  with, by  the  Supreme  Court. 

3.   Since  the  contempt  proceedings  are  pending  before  the Supreme  Court  and  the  matter  last  appeared  on  March  16,  2021  and  is likely  to  appear  in  the  next  couple  of  weeks  according  to  the  State,  let this  petition  stand  over  a  fortnight  after  the  summer  vacation.  It  is hoped  that  the  entire  seniority  list  at  all  levels  is  worked  out  before  the matter  appears  next.

4.  It  is  made  clear  that  those  who  have  enjoyed  the  benefit  of the  emergency  provision  of  temporary  promotion  can  claim  no  equity by  reason  of  the  long  occupancy  of  the  promoted  post  and  may  have to  revert  to  the  erstwhile  feeder  post,  if  the  initial  seniority  list  is prepared  according  to  merit. 

5.  *List  the  matter  on  16.06.2021.* 

 (S.B.,  CJ.)   (S.K.R.,  J.) 
08.04.2021.

======================

 P.S.Balamurugan,Salem 
    ( 30.04.2021 IST 11.16 pm )

*About Commutation* / தொகுத்து பெறும் ஊதியம் பற்றி

*Commutation*  பற்றி: அஞ்சல் துறை ஊழியர் ஒருவர் ரிட்டையர் ஆகும்போது, அவருக்கு வழக்கமான பணப் பலன்களுடன்,  "கம்யூடேஷன்" என்ற பெயரில்...